Wednesday, November 24, 2010

நீல நிலா இதழில் வெளியான கவிதைகள்

துளிப்பாக்கள்-நீல நிலா செப்டம்பர்-திசம்பர் 2009 இதழில் வெளியான கவிதைகள்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------


புரியாத பிரியம்
பிரியும் போது புரியும்.
---அ.ராமலட்சுமி.
கடக்கும் ரயில்
கையசைக்கும் சிறுவன்
சரக்கு வண்டி.
----பொன்.குமார்.
மறக்க முடியவில்லை
"மறந்து விடுங்கள்"
என அவள் சொன்ன்தை..!
---வீ.உதயக்குமரன்.
என் மூங்கில் தோப்பில்
நெருப்புத்துளி
நீ..!
---கா.அமீர்ஜான்.
கடல் அளவு நீரிருந்தும்
காய்ந்து கிடக்கிறது
கரை மணல்.
---ப.தமிழாளி.
கழுவி வைக்கப்பட்ட
குளம்பி கோப்பைகளில்
நிரம்பி வழிகிறது
நுளம்புகளின் ஏமாற்றம்.
---சி.கலைவாணி.
புறநகர் பகுதி
அரசியல்வாதி சொகுசு வீடு
வெட்டப்படும் தென்னந்தோப்பு.
---அருணச்சலசிவா.
உண்மை சொல்லவில்லை
உன்னைப் படியெடுத்த
புகைப்படங்கள்.
---பெ.விஜயராஜ்காந்தி.

தோண்டுவதன்று
தோன்றுவது
கவிதை! 
--செ.ஞானன்.

புராதன வீடு
கடனில் ஜப்தி
இடிக்கையில கண்டெடுக்கப்பட்டது
தங்கம்.
--க.இராமலிங்கம்,நன்றி-லிங்கம் இதழ்.

No comments:

Post a Comment