Wednesday, March 2, 2011

செய்தித் திரட்டு

செய்தித் திரட்டு

தங்கக் கட்டிலில் படுத்துறங்க ஆசையா?   
               உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த கட்டிலை பிரிட்டன் வடிவமைப்பாளர் ஸ்டூவார்ட் அக்கெஸ் என்பவர் உருவாக்கியுள்ளார்.இதன் விலை, மூன்று கோடி ரூபாய் பிரிட்டன் நாட்டில் லிவர்பூல் நகரைச் சேர்ந்த வடிவமைப்பாளர் ."செஸ்நட்" என்ற மரத்தில் செய்யப்பட்ட இந்த கட்டிலுக்கு விதானம் அமைக்கப்பட்டு, திரைச்சீலைகள் தொங்க விடப்பட்டுள்ளன.திரைச்சீலைத் துணிகள் "இத்தாலியன் காட்டன்" வகையைச் சேர்ந்த தீப்பிடிக்காத துணிகளாகும்.மேலும்,இந்த கட்டிலில் சுத்தமான 24 கேரட் தங்கம்,107 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
                 கட்டிலின் தலைப்பகுதிகளில் விதானம் மற்றும் சுற்றுப் பகுதிகளில்  தங்க வேலைபாடுகள் செய்யப்பட்டுள்ளன. விலை உயர்ந்த பஞ்சுகளைக் கொண்டு படுக்கை செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு வண்ணம் பூசப்பட்டு, பளபளக்கும் இந்த கட்டிலின் மதிப்பு
ரூ.3 கோடியாகும்.உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த இந்த கட்டில், இயன்திரங்களைப் பயன்படுத்தாமல்,100 சதவீதம் கை வேலைப்பாடுகளில் உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாள்ர்கள் விரும்பினால்,தங்கம் தவிர,வைரக்கற்களையும் பதித்து கட்டில் செய்ய தயாராக இருப்பதாகவும், ஆனால் ,இதைவிட இன்னும் கூடுதலாக செலவு பிடிக்கும் என்றும், ஸ்டூவர்ட் கூறுகிறார்.


நன்றி:ஜனசக்தி நாளிதழ்.