Monday, April 30, 2012

நீலநிலா மே 2012 இதழ் தூளிப்பாக்கள்

நீலநிலா மே 2012 இதழ் தூளிப்பாக்கள்

கால்களில்
ஆயிரம் முத்தம்
குளக்கரை மீன்கள்.
-கலவை சண்முகம்.

இருட்டுச் சமூகத்தை
வெளிச்சப்படுத்திய கறுப்புச் சூரியன்
காமராசர்!
-பொன்.குமார்.

நதியன் குளியல் 
சாக்கடையில் குளித்த நதி
அழுக்கைப் போக்க ஓடுகிறது
கடலில் குளிக்க!
-செல்வராஜா.


கிராமத்து பெண்ணின் முகத்தில்
அளவுக்கு மீறி அப்பியிருந்தது
உலகமாயக்கலின் ஒப்பனை1
-நீலநிலா செண்பகராஜன்.

நீலநிலா விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்

நீலநிலா விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்(மே-2012 இதழ் )


பயணம் இனித்தது
எறும்பி ன் வாயில்
சர்க்கரை.
-ஆரிசன்.

அண்ணாச்சி கடையை
பொட்டலம் போட வருகிறான்
அமெரிக்கன்!
-அருணாச்சல சிவா.

நாற்றமெடுக்கின்றன
பூங்காக்கள்
முறை தவறும் காதல்!
-ச.கோபிநாத்.

சப்பரமா? சவப்பெட்டியா?
எதிர்காலம்?
மரங்கள்...
-ச.வளர்மதி.

மௌனமாகி போனது
காற்று
மரங்களின் மரணத்தால்!
-கு.தாய்சுரேஸ்.