Tuesday, May 28, 2013

சிறுகதைப் போட்டி

சிறுகதைப் போட்டி

நீலநிலா இதழ் 10 ஆண்டு துவக்கத்தையோட்டி சிறுகதைப்போட்டி

முதல் பரிசு:ரூ.1000/-
இரண்டாம் பரிசு:ரூ.500/-
மூன்றாம் பரிசு:ரூ.300/-
ஆறுதல் பரிசு:ரூ.200/-மதிப்பிலான புத்தகங்கள் 3 நபர்களுக்கு.
விதிமுறைகள்:
1.சிறுகதைகளுக்கு பக்க வரையறை இல்லை.
2.சிறுகதைகளை தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும்.
3.சோதனை முயற்சியிலான சிறுகதைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
4.சிறுகதைகளை 15-10-2013க்குள் அனுப்ப வேண்டும்.
5.சுய விபரக்குறிப்பு மற்றும் போட்டோ உடன் உறுதுமொழி கடிதம் இணைத்து அனுப்ப வேண்டிய முகவரி-நீலநிலாஇதழ், 23,க.யி.ச.கிட்டங்கி தெரு,விருதுநகர்-626001.

Monday, May 6, 2013

காதல் கவிதை

காதல் கவிதை

பேருந்தின் எதிர் இருக்கையிலிருந்து
சிரித்தபடி
என்னைக் கைநீட்டி அழைத்த
மழலைக் கவிதைக்குப் பரிசாக
என்னருகில் இலக்கியமாய்
நின்று கொண்டிருந்த
இளம் பெண்ணொருத்தி முத்தத்தைக்
காற்றலைகளில் தவழ விட்டாள்....
அந்த முத்தத்தின் ஸ்பரிசத்தில்
'தாஜ்மகாலாய்' ஆனேன் நான்!
-ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன்.
நன்றி-நீலநிலா ஏப்ரல் 2013 இதழ்.

இலக்கியச் செய்திகள்

இலக்கியச் செய்திகள்

18-2-2013 அன்று  முதல் 28-2-2013 வரை எஸ்.பி.கே கல்லூரியின் தமிழ்த்துறை சிற்றிதழ் குறித்த சான்றிதழ் படிப்பை நடத்தியது.19-2-2013 அன்று நீலநிலா இதழ் நிறுவனர் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் சமுதாய மாற்றத்திற்கு விததிடும் சிற்றிதழ்கள் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ,மாணவியர்களுக்கு பாடம் நடத்தினார்.

10-3-2013 அன்று வல்லிக்கண்ணன் இலக்கிய  பேரவை விருதுநகரில் நடத்திய தேசிய கருத்தரங்கில் கவிஞர் நீலநிலா செண்பகராஜன் கலந்து கொண்டு 'தமிழ் இலக்கியங்களில் நல்லறம்' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை வாசித்தார்.
நன்றி-நீலநிலா இதழ் ஏப்ரல் 2013 இதழ்.

துளிப்பா

துளிப்பா
இருளடைந்த வீதியில்
வெளிச்சத்தில் மிதக்கிறது
டாஸ்மாக்!
-ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
நன்றி-சுழல் மார்ச் 2013 இதழ்