Monday, November 5, 2012

28 வது  புத்தகக்  கண்காட்சி

 நேஷனல் புக்  டிரஸ்ட்  ஆப்  இந்தியா , புதுதில்லி , நியூ  செஞ்சுரி  புக்  
ஹவு ஸ் ,சென்னை  மற்றும்  தமிழ்நாடு  கலை  இலக்கியப்  பெருமன்றம் , விருதுநகர்  கிளை  இணைந்து  28 வது  புத்தகக்  கண்காட்சியை  விருதுநகரில்  உள்ள  பூமாலை  வணிக  வளாகத்தில்  6-10-2012 அன்று  நடத்தியது.
இக்கண்காட்சியை  நீலநிலா செண்பகராஜன்  திறந்து  வைத்தார் .
 
நீலநிலாவிற்கு  கிடைத்த  விருது 

சமீபத்தில் (14-10-2012) சென்னை சைதாப்பேட்டை மகாத்மா  காந்தி நூலகம்   'சக்தி   கிருஷ்ணசாமி' விருதை  நீலநிலா  இதழ்  நிறுவனர்  நீலநிலா  
செண்பகராஜனுக்கு  பிரபல   வரலாற்று  எழுத்தாளர்   கௌதம  நீலாம்பரன் மூலம்  வழங்கியது . இவருடன்  விருது  பெற்ற மற்ற   
எழுத்தாளர்கள் கோவை  கோகுலன் ,என்.சி .மோகன்தாஸ் ,திருப்பூர் 
 கிருஷ் ணன், டாக்டர்  எம் .எஸ் .கோவிந்தராஜன் போன்றவர்கள் .

துளிப்பாக்கள் 

நிலவைத் தேடும் தெருவிளக்கு
மின்சாரம்  துண்டிக்கப்பட்ட
இரவு!

---------------------------------------------------------------------------------
உடல்  வாகனம்  மோதி
விபத்தில்  பலி
ஆணுறை கவசம் இல்லாமல்
விபச்சார  சாலையில்  உல்லாச  பயணம் .
------------------------------------------------------------------------------------
ஆக்கம் : நீல நிலா  செண்பக ராஜன்