Tuesday, February 8, 2011

அனுபவக் கட்டுரை

அனுபவக்கட்டுரை

மருத்துவமனையில் பிறந்த புத்தாண்டு
                     2011ஆம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டாக திகழ்ந்தது எனலாம். ஏன் எனில் 01.01.2011 பிறக்கும் நேரம் நான் அப்பாவிற்கு உடல் நலமின்மையால்  மருத்துமனையில் இருந்தேன்.
ஆக 2011 பிறக்கும் நேரம் நான் மருத்துவமனையில் தான் இருந்தேன்.
               சரியாக 12 மணியாகும் சமயம் நான் இருந்த மருத்துவமனையில் செவிலியர்கள் அனைவரும் "கேக்" வெட்டி உற்சாகமாக 2011 ஆண்டை வரவேற்று கொண்டாடினார்கள்.
                ஆனால் நானோ அப்பாவின் உடல்நலக்குறைவின் காரணமாக சோகமே உருவாகி இருந்தேன்.
                 ஆனாலும் என் தோழி ஒருவர் சரியாக 12.15 மணியளவில் என்னை தொலைபேசியில் அழைத்து புத்தாண்டு வாழ்த்து கூறியது மறக்கமுடியாத நிகழ்வாகும்.இன்னும் சொல்வதானால் என் சோகத்தை கொஞ்சம் குறைத்தது எனலாம்.
                பின்னர் எப்படியோ உறங்கினேன். 
                இப்படியாக  2011 எனக்கு பிறந்தது.
                05.01.2011 அன்று மருத்துவமனையிலிருந்து அப்பாவின் உடல் நலம் தேறி வீடு வந்து சேர்ந்தேன்.

தூளிப்பாக்கள்

தூளிப்பாக்கள்

மூன்றெழுத்தில்
ஒரு கவிதை
காதல்!
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி: எண்ணத்தின் வண்ணம் குறுஞ்செய்தி இதழ் 788.

உடல்நலக்குறைவு
சுவாசிக்காத தருணங்களாய்
வாசிக்காத நாட்கள்!
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன். 

புள்ளி இல்லா
புதுமைக் கோலம்
காதல்!
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
நன்றி: எண்ணத்தின் வண்ணம் குறுஞ்செய்தி இதழ்769/850.

அவள் குத்துவிளக்கைத் தூண்டினாள்
பிரகாசாமாய்
எரிகிறேன்  நான்!
ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
நன்றி: நீலநிலா இதழ் ஏப்ரல் 2011 இதழ்.


விளைநிலங்கள்
சோறு போட்டது
"ரியல் எஸ்டேட்காரனுக்கு!"
ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
நன்றி : விருதை மலர் மே 2011 இதழ்.


49-0வை ஆர்வமுடன்
வரவேற்றனர் வாக்காளர்கள்
பணத்தைப் பெற்றுக்கொண்டு!
-ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி: இனியா குறுஞ்செய்தி இதழ் 1708.

எங்கோ உருவாகி
என்னை வீழ்த்த வந்த சுனாமியாய்
என் மனைவி!

-ஆக்கம்:பா.பிரபாகர்.
-நன்றி: கொங்குசூரியன் இணைய இதழ்.

ஜனநாயகத்தை முடிவு செய்கிறது,
வாக்காளர்களுக்கு கொடுத்த
பணப்பெட்டியும்,இலவசங்களும்!
-ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி: இனியா குறுஞ்செய்தி இதழ் 1833/100.

கதவைத் திற!
காற்றாய் வரட்டும்
கவிதை!
-ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி:விருதை மலர் மே 2011 இதழ்.






















Monday, February 7, 2011

சுய முன்னேற்ற நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் கிளை சார்பாக எழுத்தாளர் நீலநிலா செண்பகராஜன் எழுதிய "வெற்றி உங்களை அழைக்கிறது" சுய முன்னேற்ற கட்டுரை நூல் வெளியீட்டு விழா விருதுநகரில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் நாடக நடிகர் வீரப்பன் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு கலை இலக்கிய பெருமன்ற விருதுநகர் மாவட்டத் தலைவர் கந்தகப்பூக்கள் சிரிபதி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். நீலநிலா செண்பகராஜன் எழுதிய வெற்றி உங்களை அழைக்கிறது சுய முன்னேற்ற கட்டுரை நூலை திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் வெளியிட எழுத்தாளர் மீனாசுந்தர் பெற்றுக் கொண்டார்.நூலை வாழ்த்தி கவிஞர் பாண்டூ,"முதற்சங்கு" இதழாசிரியர் சிவனி சதீசு ஆகியோர் பேசினார்கள்."யாரோ எழுதிய கடிதம்" கவிதை நூல் விற்பனை விவரப் பெட்டகத்தை திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் வெளியிட நூலாசிரியர் நீலநிலா செண்பகராஜன் பெற்றுக் கொண்டார்.விழா நிகழ்ச்சிகளை கவிஞர் ராமையா தொகுத்து வழங்கினார்.நிறைவாக தொல்பொருள் ஆய்வாளர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.