Friday, May 11, 2012

நினைவலைகள்

நினைவலைகள்


நீலநிலாவைத் தேடி வந்த மலேசியா எழுத்தாளர்

       நீலநிலா இதழ் நிறுவனர் கவிஞர் நீலநிலா செண்பகராஜனை காண்பதற்காக
 மலேசியாவிலிருந்து   எழுத்தாளரும்,கவிஞருமான டாக்டர்.துளசி அண்ணாமலை அவர்கள் 19-12-2011 அன்று விருதுநகர் வந்திருந்தார்.மலேசியாவில் சித்த மருத்துவராக பணிபுரியும் அவர் மலேசியாவிலிருந்து வெளிவரும் "தின முரசு" நாளிதழில் துனை ஆசிரியராக 1989-ஆம் ஆண்டு முதல் 1990-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்துள்ளார்."வாழ வேண்டும் வாச மலரே!" என்ற சிறுகதை நூலையும் வெளியிட்டுள்ளார். மலேசியா தமிழர்களின் வாழ்வியல் நிலை, மலேசியாவில் உள்ள தமிழ் எழுத்தாளர்களின் இலக்கிய முயற்சிகள், மலேசியா தமிழர்களின் திரைப்பட முயற்சிகள் குறித்தும் ஆர்வமுடன் நீலநிலாசெண்பகராஜனிடம் தன் அனுபவங்களை மலேசியா எழுத்தாளர் டாக்டர்.துளசி அண்ணாமலை சுவைபட பகிர்ந்து கொண்டார்.
-செய்தி  ஆக்கம்:-ச.கோபிநாத்.

2 comments:

  1. நல்ல சந்திப்பு.இலக்கியங்கள் மேம்பட இது மாதிரியான சந்திப்புகள் நிகழ்வது கூட அவசிமெனபடுகிறது.நன்றி வணக்கம்.

    ReplyDelete
  2. வேர்ட் வெரிபிகேசனை எடுத்து விட்டு விடலாமே?

    ReplyDelete