Friday, May 11, 2012

நீலநிலா மே விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்

நீலநிலா மே விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்

புதுக்கவிதைகள்

அவனது முகம் மலர
தியானமும் வேண்டாம்...
உபதேசமும் வேண்டாம்...
யாராவது கொடுங்கள்
ஒரு பிடி சோறு1
-வைகறை.

உனக்கான நிழல்
நான்தானென
எள்ளி நகையாடும்
நண்பர்களிடம்
அழுத்தமாய்ச் சொல்லுங்கள்
"நமக்கான நிழல்கள்
நாம்தானென!"
-ஏகலைவன்.

எம் தலைவனின்
பாமாலைகளையே
பூமாலைகளாய் சூடிக்கொண்டதால்
பொன்னந்தியில் பூத்த 
பூக்களெல்லாம் புலம்புகின்றன!
இப்போது நான்
பாமாலை சூட்டிக்கொள்வதா?
எம் தலைவனே..!
தகுந்ததொரு பதில் தருவாயா?
-ராதே.

செய்திகள் வாசிப்பது... 
நாளிதழ்களில் முழுப்பக்க
நகைக்கடை விளம்பரம்
முதல் பக்கத்தில்...
நகை வாங்குதா
வேண்டாமா என்ற குழப்பம்
நடுநிலையாளர் மனதில்...
யார்  திருடன்?எது திருட்டு?
எங்கு ஒரே இருட்டு..
-"கவிச்சுடர்" போஸ்.
 

1 comment: