Tuesday, February 8, 2011

அனுபவக் கட்டுரை

அனுபவக்கட்டுரை

மருத்துவமனையில் பிறந்த புத்தாண்டு
                     2011ஆம் ஆண்டு எனக்கு மறக்க முடியாத ஆண்டாக திகழ்ந்தது எனலாம். ஏன் எனில் 01.01.2011 பிறக்கும் நேரம் நான் அப்பாவிற்கு உடல் நலமின்மையால்  மருத்துமனையில் இருந்தேன்.
ஆக 2011 பிறக்கும் நேரம் நான் மருத்துவமனையில் தான் இருந்தேன்.
               சரியாக 12 மணியாகும் சமயம் நான் இருந்த மருத்துவமனையில் செவிலியர்கள் அனைவரும் "கேக்" வெட்டி உற்சாகமாக 2011 ஆண்டை வரவேற்று கொண்டாடினார்கள்.
                ஆனால் நானோ அப்பாவின் உடல்நலக்குறைவின் காரணமாக சோகமே உருவாகி இருந்தேன்.
                 ஆனாலும் என் தோழி ஒருவர் சரியாக 12.15 மணியளவில் என்னை தொலைபேசியில் அழைத்து புத்தாண்டு வாழ்த்து கூறியது மறக்கமுடியாத நிகழ்வாகும்.இன்னும் சொல்வதானால் என் சோகத்தை கொஞ்சம் குறைத்தது எனலாம்.
                பின்னர் எப்படியோ உறங்கினேன். 
                இப்படியாக  2011 எனக்கு பிறந்தது.
                05.01.2011 அன்று மருத்துவமனையிலிருந்து அப்பாவின் உடல் நலம் தேறி வீடு வந்து சேர்ந்தேன்.

1 comment:

  1. தந்தையின் உடல் நலம் சீராக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete