Monday, February 7, 2011

சுய முன்னேற்ற நூல் வெளியீட்டு விழா

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருதுநகர் கிளை சார்பாக எழுத்தாளர் நீலநிலா செண்பகராஜன் எழுதிய "வெற்றி உங்களை அழைக்கிறது" சுய முன்னேற்ற கட்டுரை நூல் வெளியீட்டு விழா விருதுநகரில் உள்ள முருகன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் நாடக நடிகர் வீரப்பன் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு கலை இலக்கிய பெருமன்ற விருதுநகர் மாவட்டத் தலைவர் கந்தகப்பூக்கள் சிரிபதி தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். நீலநிலா செண்பகராஜன் எழுதிய வெற்றி உங்களை அழைக்கிறது சுய முன்னேற்ற கட்டுரை நூலை திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் வெளியிட எழுத்தாளர் மீனாசுந்தர் பெற்றுக் கொண்டார்.நூலை வாழ்த்தி கவிஞர் பாண்டூ,"முதற்சங்கு" இதழாசிரியர் சிவனி சதீசு ஆகியோர் பேசினார்கள்."யாரோ எழுதிய கடிதம்" கவிதை நூல் விற்பனை விவரப் பெட்டகத்தை திரைப்பட இயக்குனர் நாஞ்சில் அன்பழகன் வெளியிட நூலாசிரியர் நீலநிலா செண்பகராஜன் பெற்றுக் கொண்டார்.விழா நிகழ்ச்சிகளை கவிஞர் ராமையா தொகுத்து வழங்கினார்.நிறைவாக தொல்பொருள் ஆய்வாளர் பாலச்சந்திரன் நன்றி கூறினார்.

1 comment:

  1. நூல் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete