Tuesday, February 8, 2011

தூளிப்பாக்கள்

தூளிப்பாக்கள்

மூன்றெழுத்தில்
ஒரு கவிதை
காதல்!
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி: எண்ணத்தின் வண்ணம் குறுஞ்செய்தி இதழ் 788.

உடல்நலக்குறைவு
சுவாசிக்காத தருணங்களாய்
வாசிக்காத நாட்கள்!
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன். 

புள்ளி இல்லா
புதுமைக் கோலம்
காதல்!
ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
நன்றி: எண்ணத்தின் வண்ணம் குறுஞ்செய்தி இதழ்769/850.

அவள் குத்துவிளக்கைத் தூண்டினாள்
பிரகாசாமாய்
எரிகிறேன்  நான்!
ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
நன்றி: நீலநிலா இதழ் ஏப்ரல் 2011 இதழ்.


விளைநிலங்கள்
சோறு போட்டது
"ரியல் எஸ்டேட்காரனுக்கு!"
ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
நன்றி : விருதை மலர் மே 2011 இதழ்.


49-0வை ஆர்வமுடன்
வரவேற்றனர் வாக்காளர்கள்
பணத்தைப் பெற்றுக்கொண்டு!
-ஆக்கம்:நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி: இனியா குறுஞ்செய்தி இதழ் 1708.

எங்கோ உருவாகி
என்னை வீழ்த்த வந்த சுனாமியாய்
என் மனைவி!

-ஆக்கம்:பா.பிரபாகர்.
-நன்றி: கொங்குசூரியன் இணைய இதழ்.

ஜனநாயகத்தை முடிவு செய்கிறது,
வாக்காளர்களுக்கு கொடுத்த
பணப்பெட்டியும்,இலவசங்களும்!
-ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி: இனியா குறுஞ்செய்தி இதழ் 1833/100.

கதவைத் திற!
காற்றாய் வரட்டும்
கவிதை!
-ஆக்கம் : நீலநிலா செண்பகராஜன்.
-நன்றி:விருதை மலர் மே 2011 இதழ்.






















1 comment:

  1. சுவாசிக்காத தருணங்களாய்
    வாசிக்காத நாட்கள்!
    வாசிக்காமல் இருப்பது சுவாசிக்கதிருப்பதற்குச் சமமே!

    ReplyDelete