Monday, April 30, 2012

நீலநிலா விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்

நீலநிலா விருதுநகர் சிறப்பிதழ் கவிதைகள்(மே-2012 இதழ் )


பயணம் இனித்தது
எறும்பி ன் வாயில்
சர்க்கரை.
-ஆரிசன்.

அண்ணாச்சி கடையை
பொட்டலம் போட வருகிறான்
அமெரிக்கன்!
-அருணாச்சல சிவா.

நாற்றமெடுக்கின்றன
பூங்காக்கள்
முறை தவறும் காதல்!
-ச.கோபிநாத்.

சப்பரமா? சவப்பெட்டியா?
எதிர்காலம்?
மரங்கள்...
-ச.வளர்மதி.

மௌனமாகி போனது
காற்று
மரங்களின் மரணத்தால்!
-கு.தாய்சுரேஸ்.




No comments:

Post a Comment