Wednesday, November 2, 2011

குறுங்கவிதைகள்

குறுங்கவிதைகள்

எங்கும் நிற்கிறேன்
நான்!
நிற்காமலே..!
-----------------------------------------------------
சொல்லலாம்..!
சொல்லாமாலும் இருக்கலாம்..!
சொல்லி சொல்லலாம்..!
சொல்லாமாலும் சொல்லலாம்..!
---------------------------------------------------------
நானோ என்னைத் தேடினேன்..!
நீயோ உன்னைத் தேடினாய்..!
ஊரோ நம்மைத் தேடுகிறது..!
--------------------------------------------------------------
தூங்காமல் கவிதை எழுதினேன்
விழித்திருக்கும்
அறிவுப் பசிக்குச் சோறிட்டு..!
--------------------------------------------------------------------
நீ பார்த்தாய்..!
நான் தேடினேன்..!
யார் தான் நம்மை உணர்வது..!
-------------------------------------------------------------------------
சிரித்தாள்..!
சிரித்தேன்..!
சிரித்தார்கள்..!
------------------------------------------------------------------------
எறும்புகள் மொய்க்கிறது
புன்னகைக்கும் ரோஜாப்பூக்களை..!
------------------------------------------------------------------------
 ஆக்கம்: நீலநிலா செண்பகராஜன்.

No comments:

Post a Comment